''செலவழிச்ச, 150 கோடியில, கடைசியில, தேறினது, 17 கோடி ரூபாய் தானாம்ங்க...'' என்றபடி, நாயர் கடைக்கு வந்தார் அந்தோணிசாமி.

''விவரமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''இந்த ஆட்சி வந்ததும், சமச்சீர் கல்விக்கு பதிலா, பழைய பாட புத்தகங்களையே வழங்க, ஏற்பாடு செஞ்சாங்க தெரியுமில்ல... அவசரம் அவசரமா, 150 கோடி ரூபாய் செலவழிச்சு, புத்தகங்களை அச்சடிச்சாங்க...

கடைசியில, அது வீணா போச்சு... சுப்ரீம் கோர்ட் வரை, வழக்கு போய், கடைசியில, சமச்சீர் கல்வி பாட புத்தகங்களையே கொடுத்தாங்க...
''பழைய புத்தகங்களை என்ன பண்றது தெரியாம, பல மாதமா பாடநூல் கழக குடோன்கள்ல முடக்கி வைச்சிருந்தாங்க... கடைசியில, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துகிட்ட, அரவைக்கு கொடுத்தாங்களாம்... இதுல, கல்வித்துறைக்கு கிடைச்சது, வெறும், 17 கோடி ரூபாய் தானாம்...'' என, விளக்கினார் அந்தோணிசாமி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...