கணினி ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரிக்கை

திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டையில் கணினி ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கணினி ஆசிரியர் துரை தலைமை வகித்தார்.
கோரிக்கைகள்: கடந்த 2006-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 6 முதல்
10-ஆம் வகுப்பு வரையிலான கணினி பாடத்திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட முன்மாதிரி வகுப்புத் திட்டத்தை (ஸ்மார்ட் கிளாஸ்) நடைமுறைப்படுத்தி, கணினி பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன. இக்கூட்டத்தில் பள்ளியில் தனியார் துறை மூலமாக கணினி கல்வி வழங்கும் ஐ.சி.டி. முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...