1990ல் வெறும் 6 லட்சம்
குழந்தைகளுக்கு இருந்த
ஏ.டி.எச்.டி இன்று 35 லட்சம்
குழந்தைகளுக்கு இருக்கிறது. 20
ஆண்டுகளில் எப்படி இத்தனை லட்சம்
குழந்தைகளுக்கு இது
வந்தது?
மருந்து விற்பனையை அதிகரிக்க
ஏ.டி.எச்.டி ஸ்டான்டர்டுகள் தளர்த்தபட்டன
என்கிறது இக்கட்டுரை.
"ஏடிசிடி டிஸார்டர்
என்பது மருந்துகம்பனிகள்
திட்டமிட்டு ஆபத்தான, விலை உயர்ந்த
மருந்துகளை விற்பனை செய்ய
உருவாக்கிய சிண்ட்ரோம்"
நேரடியாக மக்களிடமே விளம்பரம்
செய்து "உங்கள்
குழந்தைகளுக்கு ஏ.டி.எச்.டி
இருக்கலாம்" என மருத்துவர் மூலம்
மக்களை அணுகாமல் நேரடியாக
அணுகியதால் பீதியடைந்த பலரும்
பள்ளியில் குறைவாக மதிப்பெண்
பெறும் மாணவர்களுக்கு எல்லாம்
ஏ.டி.எச்.டி இருப்பதாக்
சந்தேகப்பட்டு மருத்துவரிடம்
கொண்டு சென்றார்கள்.
ஏ.டி.ச்.டி விளம்பரங்கள் "நல்ல
புத்திசாலிதனமாக இருக்கும் உங்கள்
பிள்ளை குறைந்த
மதிப்பெண்களை பரிட்சையில்
பெறுகிறானா? அப்ப
அவனுக்கு ஏ.டி.எச்.டி தான்" என
விளம்பரம் செய்தன.
ஐன்ஸ்டீன் கூட பள்ளியில் குறைவான
மதிப்பெண் பெற்றவர் தான்.
கணிதமேதை ராமானுஜம்
ஆங்கிலத்தில் பெயில் ஆனவர்.
கேர்லஸ் ஆக இருப்பது,
பொறுமையற்று இருப்பது எல்லாம்
இன்று ஏ.டி.எ.ச்.டி ஆக
கருதப்பட்டு அக்குழந்தைகளுக்கு மிக
தீவிரமான
ஏ.டி.எச்.டி இருப்பவர்களுக்கு
கொடுக்கபடும் மருந்துகள்
கொடுக்கபடுகின்றன. அதுபோக
மருந்து கம்பனிகள்
இப்போது நேரடியாக
குழந்தைகளிடமே விளம்பரம்
செய்கின்றன. பல காமிக் புத்தகங்களில்
ஏச்.டி.எச்.டி மருந்துகள் விளம்பரங்கள்
வெளிவருகின்றன.
இந்த மருந்துகளின் விளைவாக
தூக்கமின்மை, பசி எடுக்காமை,
ஹலூசினேஷன், மிக எக்ஸ்ட்ரீம்
கேஸ்களில் தற்கொலை,
மனநிலை பாதிப்பு ஆகியவை
குழந்தைகளுக்கு நேர்கின்றன.
ஏ.டி.எச்.டி உண்மையான
வியாதிதான். ஆனால்
ஏ.டி.எச்.டி இல்லாத பலரும் இதற்கான
சிகிச்சை எடுக்கும் வகையில்
மருந்துகள் விற்பனை செய்யபட்டன
என்கிறது இக்கட்டுரை.
ஆறு நிமிடம் ஒருவரிடம் பேசி,
கேள்வி கேட்டு அவருக்கு ஏ.டி.எ.ச்.டி
என "கண்டுபுடித்து"
மருந்துகளை எழுதிகொடுக்கும்
உதாரணம் ஒன்று கட்டுரையில்
காட்டப்படுகிறது. இவை எல்லாம் நிகழ
ஆன நேரம் வெறும் 6 நிமிடங்கள்!!!!
ஒருவருக்கு ஏ.டி.எச்.டி இருக்கு
என்பதை கண்டுபிடிக்க எந்த
உறுதியான மெடிக்கல் சோதனையும்
கிடையாது. மருந்து கம்பனிகளின்
விளம்பர, ஸ்பான்சர் பணத்தில் இயங்கும்
அமெரிக்க மனநல மருத்துவர் சங்கம்
ஏ.டி.எச்.டி வியாதி இருப்பதற்கான
தரகட்டுபாட்டை தளர்த்திகொண்டே
வருகிறது. இதன்படி
"கேர்லஸ் மிஸ்டேக் செய்வது"
"தன்
முறை வரும்வரை காத்திருப்பதில்
எரிச்சல் அடைவது"
இவை எல்லாம் ஏ.டி.எச்.டியின்
அறிகுறியாக
இன்று கருதப்பாடுகிறது.
ஏ.டி.எச்.டி மருந்து விற்பனை இன்று
வெறும் 10 வருடங்களில் 2 பில்லியன்
டாலரில் இருந்து 8 பில்லியன்
டாலராக உயர்ந்துள்ளது!!!!!!