தமிழகத்தில் அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை
பயிலும் சிறுபான்மையின மாணவ,
மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த கல்வி ஆண்டுக்கான கல்வி உதவி தொகை பெற விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை www.tn.gov.in/bcmbcmw/welfschemesminorities.htm என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
அதை பூர்த்தி செய்து வரும் 15ம்தேதிக்குள் அந்தந்த கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அதை சரிபார்க்கும் கல்வி நிலையங்கள் அந்த விண்ணப்பங்களை
வரும் 22ம்தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் சுந்தரவல்லி கூறியுள்ளார்.