ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் கணக்கு குறித்த
விவரங்களை வரும் மார்ச் 10-ஆம் தேதிக்குள் கல்லூரி சாலையில் உள்ள
ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இது குறித்து சென்னை-6 இல் செயல்பட்டு வரும் ஓய்வூதிய அலுவலர் கே.டி.குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை கல்லூரிச்
சாலையில் உள்ள ஓய்வூதிய அலுவலக மாதிரித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம்
பெறுவோர் தங்களது ஓய்வூதிய ஆணை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகலுடன்
அலுவலகத்துக்கு மார்ச் 10-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும். நேரில் ஆஜராக
முடியாதவர்கள் இந்த விவரங்களை ஸ்கேன் செய்து பிடிஎஃப் முறையில் மின்னஞ்சல்
மூலமாக அனுப்பலாம். மேற்கூறிய ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்களுக்கு 2014-ஆம்
ஆண்டு மார்ச் மாதத்திற்கான ஓய்வூதியத்தை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு
வைக்க இயலாது. மேலும் விவரங்களுக்கு: தொலைபேசி: 044-2820 3500, 2820 3600,
2827 9239 மின்னஞ்சல்: ppochn.tndt@nic.in