டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்

ஆசிரியர் தகுதித்தேர்வில், சலுகை மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றவர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று துவங்கியது.

தமிழகத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம், அரசு பள்ளிகளுக்கான, ஆசிரியர் நியமனம் நடைபெறுகிறது. இதில், கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற, அனைவருக்கும், அரசு பணி வழங்கப்பட்டது. நடப்பாண்டில், 30
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சியடைந்து, சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில், பிற்படுத்தப்பட்டோருக்கு, தமிழக அரசு, சலுகை மதிப்பெண் வழங்கியது. இதனால், மேலும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான, மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, நேற்று துவங்கியது. சான்றிதழ் சரிபார்க்கப்பட வேண்டிய நாள் குறித்த விவரம், தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...