ஆசிரியர் நியமன தேர்வு மதிப்பெண்: தவறான தகவல் அளித்தவர் மனு தள்ளுபடி

முதுகலை ஆசிரியர் நியமனத் தேர்வில், கூடுதல் மதிப்பெண் பெற, தவறான தகவல் அளித்தவரின் மனுவை, மதுரை ஐகோர்ட்
கிளை தள்ளுபடி செய்தது.

மனு தாக்கல்:

புதுக்கோட்டை, மணல்மேல்குடி சுவர்ணகுமார் தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம், 2012 -- 13ல் நடந்த, முதுகலை இயற்பியல் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்றேன். மொத்தம், 150க்கு 102 மதிப்பெண் 'கட்- - ஆப்' நிர்ணயிக்கப்பட்டது. எனக்கு, 101 மதிப்பெண் கிடைத்தது. விடைத்தாள் நகலை சரிபார்த்தேன். வினா, 115க்கு சரியான விடையளித்துள்ளேன். அதற்கு, 1 மதிப்பெண் கூடுதலாக வழங்கி, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருந்து, என்னை நியமிக்க டி.ஆர்.பி.,க்கு உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.

அரசு வழக்கறிஞர்:

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன், விசாரணைக்கு மனு வந்தது. அரசு வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகி, மனுதாரரின் அசல் விடைத்தாள் நகலை சமர்ப்பித்தார். நீதிபதி: மனுதாரர், 115வது வினாவிற்கு, 'சி' என பதில் அளித்துள்ளார்.

கூடுதல் மதிப்பெண்:

ஆனால், 'பி' தான் சரியான விடை; அதை விடையாக எழுதியுள்ளேன்; அதனடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என, மனு செய்துள்ளார். கோர்ட்டிற்கு, தவறான தகவல் அளித்துள்ளார். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...