குழந்தைகள்
உடல் பருமன் ஆன பிறகே பெற்றோர் கவலை கொள்கிறார்கள். இனி அது
பற்றிய
கவலைப்பட தேவையில்லை. அதற்கான எளிய பரிசோதனை முறை ஒன்றை இங்கிலாந்து
நாட்டில் உள்ள சவுத் ஆம்ப்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து
விட்டார்கள்.அதாவது குழந்தைகளின் ரத்தத்தை பரிசோதனை (டி.என்.ஏ.) செய்து பார்த்தாலே போதும் வரும் காலத்தில் இவர்கள் உடல் பருமன் அதிகரிக்குமா? என்பதை முன்கூட்டியே கண்டுபிடித்து விடலாம் என்றும் அதை வைத்து குழந்தைக்கு எந்த வகையில் உணவு கட்டுப்பாடு அல்லது உடற்பயிற்சி அளிக்கலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 5 வயது தொடங்கி 14 வயது வரைக்கும் சுமார் 40 குழந்தைகளின் (டி.என்.ஏ.) மாதிரியை ஆய்வு செய்து இந்த முடிவுக்கு வந்துள்ளார்கள்.