பலந்த்சார்: உத்தரபிரதேச மாநிலம், பலந்த்சார் என்ற இடத்தில், சமாஜ்வாடி சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில்,
அக்கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசினார். அப்போது, 'மாநிலத்தில் உள்ள அனைத்து ஜூனியர் ஆசிரியர்களும் சமாஜ்வாடி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு போட வேண்டும். இல்லையென்றால், அவர்கள் தங்களின் வேலையை இழக்க நேரிடும்' என்றார்