தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணியில் 16,000 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். மேலும் ஓட்டு எண்ணுவது தொடர்பாக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும், 8 மாவட்டங்களைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும், மே 5ம் தேதி சென்னையிலும், மே 6ம் தேதி கோவையிலும், மே 7ம் தேதி மதுரை மற்றும் திருச்சியிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.