கூடுதலாக 2 வாய்ப்பு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு ஜூன் 30 வரை விண்ணப்பம்


ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் சிவில் சர்வீஸ் தேர்வுகள்
தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சாதாரணமாக பிப்ரவரி, மார்ச், மாதங்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாவது வழக்கம். தற்போது 2 மாதங்களுக்கு மேல் தாமதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெறும். www.upsconline.nic.in  என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் இந்த மாதம் 30ம் தேதி இரவு 11.59 வரை  விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்கள் இந்த இணையதளத்திலும்,www.upsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் இருந்தும் பெறலாம்.சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு 2 கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்ட பின்னர் நடைபெறுகின்ற முதல் தேர்வு இது ஆகும்.

வயது வரம்பு கடந்து சென்றவர்களும் இந்த கூடுதல் வாய்ப்பை பயன்படுத்திட முடியும். அதற்கு ஏற்றவகையில் அதிகபட்ச வயது வரம் பில் 2 வயது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்வு எழுத மொத்தம் 4 வாய்ப்புகள் மட்டுமே இருந்த நிலையில் இது 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒபிசி பட்டியலில் உள்ளவர்கள் 9 முறை முயற்சிக்கலாம். பட்டியல் வகுப்பினர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது. ஆரம்ப கட்ட தேர்வு அப்ஜெக்டிவ் முறையில் நடைபெறும். தவறான கேள்விக்கு மதிப்பெண் குறையும். சிவில் சர்வீஸ் முதல் கட்ட தேர்வும் ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெறும். தேர்வுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் இ&அட்மிஷன் சர்டிபிகேட் வழங்கப்படும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...