ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது டி.ஆர்.பி, 1ம் தேதி தேர்வுப்பட்டியல் வெளியாகிறது

ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்'என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்று மாலை
தெரிவித்தது.

 'வரும், 30ம் தேதி, டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்' என, ஏற்கனவே, டி.ஆர்.பி., அறிவித்து இருந்தது.இதற்கு,ஒரு சில தினங்களே அவகாசம் இருப்பதால், தேர்வு பட்டியலை எதிர்பார்த்து, தேர்வர்கள்ஆவலுடன் உள்ளனர்.

இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை கூறியதாவது: தேர்வு பட்டியலை, இணையதளத்தில் வெளியிடுவதற்கான பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன. திட்டமிட்டபடி, பணி முடிந்தால், வரும், 30ம் தேதி, 10,700 ஆசிரியர்களின் தேர்வுபட்டியல் வெளியாகும்.


பணி முடிய, சற்று கால தாமதம் ஏற்பட்டால், ஒரு நாள் தள்ளிப் போகலாம். எப்படியும், ஆக., 1ம் தேதிக்குள், இறுதி பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...