ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிராக உண்ணாவிரதம்

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் அளித்த மதிப்பெண் தளர்வுக்கு எதிராக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90
மதிப்பெண்ணுக்கு அதிகமாக எடுத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் சமூக நீதிக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் இது காலம் கடந்த முயற்சியாக நினைக்கின்றனர். இதனால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று நினைத்த இறுதி பட்டியலில் இடம் பெறாத நடுநிலையாளர்கள் போராட்டத்தை தவிர்த்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...