ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் ஒரே மாதிரியாக தேர்ச்சி மதிப்பெண்ணை நிர்ணயித்தது சட்டவிரோதம்

வேலையில்லாத பட்டதாரி ஆசிரியர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 2012–ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண்
சலுகை அளிக்கப்படவில்லை. ஆனால் 2013–ம் ஆண்டு நடந்த தேர்வில் மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. புதுவை அரசு கடந்த 2012–ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் மதிப்பெண் சலுகை அளிக்கவேண்டும்.

கட்டாய கல்வி சட்டத்தின்படி ஒன்று முதல் 8–ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். அதற்காக 2012–ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. புதுவை கல்வித்துறையில் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாமல் பட்டதாரி ஆசிரியர் வேலை பதவி உயர்வு மூலம் கொடுக்க சட்டம் உள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் ஒரே மாதிரியாக தேர்ச்சி மதிப்பெண்ணை நிர்ணயித்தது சட்டவிரோதம். இது அரசியல் சட்டத்தை மீறிய செயல். எனவே இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்து நிர்ணயித்து, தனது அரசியல் சட்ட கடமையை புதுவை அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...