வானில் இரு நிலவு’ வதந்தியை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்

ஆகஸ்ட் 27-ம் தேதி வானில் இரண்டு நிலவுகள் தெரியும் என்று கூறப்படுவது வதந்தி. அதை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆகஸ்ட் 27-ம் தேதி செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வருவதால், வானில் இரண்டு நிலவுகள் தெரிவது போல் இருக்கும் என்று கூறுகின்றனர். ஆனால், உண்மையில் செவ்வாய் கிரகம் ஒரு சிறிய ஒளி புள்ளியாகத்தான் தெரியும். செவ்வாய் நிலவு போல தெரியும் என்பது வதந்தியே. இவற்றை நம்ப வேண்டாம். உண்மையில் இந்த ஆண்டு செவ்வாய் கிரகம் பூமியிலிருந்து 5,57,63,108 கி.மீ. தூரத்தில் தெரியும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...