பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று !!!!

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) வெளியிடப்பட உள்ளதாக அரசுத்
தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் விவரங்கள் student.sslc14rt.in என்ற இணையதளத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.

இந்தப் பட்டியலில் இல்லாத விடைத்தாள்களின் மதிப்பெண்ணில் எந்தவித மாறுதலும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண்ணில் மாறுதல் இருப்பவர்கள் அந்தந்த மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில், பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...