செப்டம்பர் 30ம் தேதி எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். காலி இடங்களுக்கான கலந்தாய்வு

தமிழகத்தில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 30ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கு இரண்டு கட்டமாக கலந்தாய்வு முடிந்து, இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சுயநிதி கல்லுாரிகளில் ஒதுக்கீடு பெற்றும் மாணவர்கள் சிலர் சேராமல் விட்டுள்ளனர்.
இந்த இடங்கள், சேர்க்கையில் மீதமுள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு, நாளை (செப்., 30) சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் நடக்கும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை கலந்தாய்வு நடக்கும். எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்ற விவரங்களை செப்டம்பர் 29ம் தேதி தெரிந்து கொள்ளலாம். யார் யார் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்பது போன்ற விவரங்களை, www.tnhealth.orgஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...