விண்வெளி ஆய்வில் இந்தியா சளைத்தது அல்ல

கடந்த, ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., செயற்கைகோள், இஸ்ரோவின், 13 ஆண்டு உழைப்பின் மூலம் சாத்தியமானது. இத்தகைய வசதி, இந்தியாவை தவிர,
அமெரிக்க, ரஷ்யா, பிரிட்டன், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளது. இது முற்றிலும் உள்நாட்டு கிரையோஜெனிக் என்ஜின் தொழில் நுட்பத்துடன் துவங்கப்பட்டது.

தற்போது ஜி.எஸ்.எல்.வி., மார்க்-3 என்ற செயற்கைகோள் ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. பரிசார்த்த முறையில், வரும் அக்டோபரில் விண்ணில் ஏவப்படும். ராக்கெட் தயாரிக்க, அதன் தன்மைக்கேற்ப செலவினங்கள் ஏற்படும். செயற்கை கோள் உருவாக்க, 500 கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. விண்வெளி ஆய்வை, தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காகவும், வணிக நோக்கத்துக்காகவும், உலக நாடுகள் பயன்படுத்தி கொண்டிருக்கையில், சமுதாய நன்மைக்காக மட்டுமே விண்வெளி ஆய்வில் இந்தியா ஈடுபடுகிறது.

தொலை தொடர்பு துறையிலும், இயற்கை வளங்களை கண்டறிவதிலும், வங்கி சேவை, அரசு நிர்வாகம் ஆகியவற்றிலும், நாட்டின் செயற்கை கோள்களின் பங்கு மகத்தானது. விண்வெளி ஆராய்ச்சியில் மற்ற வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டு பார்க்கையில், நமது விஞ்ஞானிகள் எவ்விதத்ததிலும் இளைத்தவர்கள் அல்ல என்பதை, அவ்வப்போது ஏவப்படும் விண்கலங்களும், செயற்கை கோள்களும் நிரூபித்துள்ளன 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...