மாணவர்களுக்கான திட்டங்கள் முறையாக நடக்கிறதா? என அதிகாரிகள் கண்காணிப்பு

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் உட்பட வகுப்புகளுக்கேற்ப 13 வகையான நலத்திட்ட உதவிகளை அரசு இலவசமாக வழங்குகிறது. மாணவர்களுக்கு சரியான நேரத்தில் சென்றடைகிறதா என, கண்காணிக்க இரு மாவட்டத்திற்கு, ஒரு கல்வித்துறை இணை இயக்குனர் பொறுப்பு (நோடல்) அதிகாரியாக நியமிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. சிவகங்கை, ராமநாதபுரத்திற்கு இணை இயக்குனர் கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் சிவகங்கை வந்தார். 2-ம் பருவத்திற்கான சீருடை, நோட்டு, புத்தகம் வழங்கியது குறித்து டி.இ.ஓ., அலுவலகத்தில் ஆய்வு செய்தார். சி.இ.ஒ., அலுவலகத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். உடன் சி.இ.ஓ.,செந்தி வேல்முருகன், டி.இ.இ.ஓ., உடனிருந்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...