பணி நியமன ஆணை பெற்றவுடன் நீங்கள் செய்ய வேண்டியது

Mr.Aalla-Baksha
1. உங்கள் பணிநியமன ஆணையில் குறிப்பிட்டுள்ளதைப் போல் முதன்மை சிவில் சர்ஜன் அல்லது சிவில் சர்ஜனிடம் சென்று மெடிக்கல் பிட்னஸ் சர்டிஃபிகேட் வாங்குங்கள். அந்த சர்டிஃபிகேட்டை இரண்டு நகல்கள் எடுத்து வைக்கவும்.


2. ஏற்கனவே பணியில் சேர்வதற்கான கடிதம் குரூப்பில் போட்டு இருக்கிறேன். அதன் அடிப்படையில் ஜாய்னிங் லெட்டர் தயார் செய்து
கொள்ளுங்கள்.

3. உங்கள் சர்டிபிகேட் அனைத்தையும் மூன்று நகல்கள் எடுத்து கொள்ளுங்கள்.

4. நீங்கள் பணியில் சேர போகும் பள்ளியில் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்று தெரிந்திருந்தால் அதற்கேற்ப இனிப்பு வாங்கி கொள்ளவும்.

5. காலை 9 மணிக்கு நீங்கள் பணியில் சேர வேண்டிய பள்ளிக்கு சென்று விடவும்.

6. பணிநியமன ஆணையை மூன்று நகல்கள் எடுத்து கொள்ளுங்கள்.

7. எஸ்.ஆர் புக் அதிக பக்கம் உள்ளது வாங்கி கொள்ளவும்.

8. இரண்டு புகைப்படங்கள் கொண்டு செல்லவும்.

9. அழகான ஆடை அணிந்து செல்லுங்கள்.

10. உங்கள் பள்ளி தொலைவில் இருந்தால் உணவையும் குடிநீரையும் கொண்டு செல்லுங்கள்.

அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள்
இப்படிக்கு-அனைத்து அட்மின்ஸ்-Mr.Aalla-Baksha

TET-பணியில் சேருவது சம்பந்தமாக-Model Letter-Rab -Baksha
விடுநர்
................
...................
.......................
பெறுநர்
தலைமை ஆசிரியர்,
அரசு............ பள்ளி,
............
பொருள்: பணியில் சேருவது சம்பந்தமாக.
மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு
வணக்கம். நான் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் தாள் இரண்டில்/ஒன்றில் தேர்ச்சி பெற்றேன். எனது பதிவு எண்:......... மற்றும் தரவரிசை பட்டியல் எண்...... ஆகும்.
3.9.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு .............பள்ளியை எனது
பணிபுரியும் இடமாக தேர்ந்து எடுத்தேன். இன்று முற்பகல் காலை 9 மணிக்கு பணியில் சேர வந்துள்ளேன். எனவே பணியில் சேர என்னை அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                                                                                                                இப்படிக்கு
                                                                                                                                        .........
இடம்:
தேதி:

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...