தமிழகத்தில் இனி கண்டிப்பாக தமிழ் கற்கவேண்டும்

தமிழகத்தில் செயல்படும் அனைத்து வகை நர்சரி, பிரைமரி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.


இதன் மூலம் தமிழகத்தில் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளும் தமிழை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த திமுக அரசு அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும் என சட்டம் இயற்றியது. ஆனால் அதற்கு தமிழகத்தில் ஆதரவு இருந்தாலும் சிலர் குறை கூறினர். இந்நிலையில், தற்போது ஆட்சி யில் உள்ள அதிமுக அரசு மேற்கண்ட சட்டத்தை அடிப்படையாக கொண்டு கடந்த 18ம் தேதி ஒரு உத்தரவை தயாரித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் செயல்படும் அனைத்து நர்சரி, பிரைமரி, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள், தனிப் பட்ட நபரோ அல்லது அமைப்போ நடத்தும் சிறுபான்மை பள்ளிகள் ஆகியவை அனைத் திலும் தமிழ் ஒரு பாடமாக நடத்தப்பட வேண்டும். மத்திய அரசின் 2009ம் ஆண்டு சட்டம் 35ல் குறிப்பிட்டுள்ள சிறப்பு பிரிவு பள்ளிகள் கேந்திரிய வித்தியாலயா 40, நவோதயா பள்ளிகள் 2, சைனிக் பள்ளி 1 அடங்கும்.

சிபிஎஸ்இ பள்ளிகளும் நடத்த வேண்டும்

தமிழகத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த திமுக அரசு அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும் என சட்டம் இயற்றியது. ஆனால் அதற்கு தமிழகத்தில் ஆதரவு இருந்தாலும் சிலர் குறை கூறினர். இந்நிலையில், தற்போது ஆட்சி யில் உள்ள அதிமுக அரசு மேற்கண்ட சட்டத்தை அடிப்படையாக கொண்டு கடந்த 18ம் தேதி ஒரு உத்தரவை தயாரித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் செயல்படும் அனைத்து நர்சரி, பிரைமரி, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள், தனிப் பட்ட நபரோ அல்லது அமைப்போ நடத்தும் சிறுபான்மை பள்ளிகள் ஆகியவை அனைத் திலும் தமிழ் ஒரு பாடமாக நடத்தப்பட வேண்டும். மத்திய அரசின் 2009ம் ஆண்டு சட்டம் 35ல் குறிப்பிட்டுள்ள சிறப்பு பிரிவு பள்ளிகள் கேந்திரிய வித்தியாலயா 40, நவோதயா பள்ளிகள் 2, சைனிக் பள்ளி 1 அடங்கும்.

அவை தவிர தமிழக அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் செயல்படும் 565 சிபிஎஸ்இ பள்ளிகளும் தமிழை ஒரு பாடமாக நடத்த வேண்டும்.
அதிகாரிகளுக்கே தெரியாத உத்தரவு

தமிழக அரசின் உத்தரவு குறித்து சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்துவோர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மத்திய அரசின் பள்ளிகளை தமிழக அரசு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சி இது. மேலும் இந்த உத்தரவு தங்களை கட்டுப்படுத்தாது என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இந்த உத்தரவு கடந்த 18ம் தேதி பள்ளிக் கல்வித்துறை தயாரித்துள்ளது.

இது குறித்து தொடக்க கல்வி இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர், மேனிலைப் பள்ளிகள் இயக்குநர் ஆகியோரிடம் கேட்டபோது இதுகுறித்து தங்களுக்கு எந்த விவரமும் தெரியாது என்று பதில் கூறினர். கல்வித்துறை அதிகாரிகளுக்கே தெரியாமல் இப்படி ஒரு உத்தரவு கடந்த 18ம் தேதி வெளியாகியுள்ளது வேடிக்கை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...