வரும் 13ம் தேதி மாநில அளவிலான செஸ் இறுதிப் போட்டி

பள்ளி மாணவ, மாணவியரிடையே, மாநில அளவிலான, செஸ் இறுதிப் போட்டி, வரும் 13ம் தேதி, சென்னையில் நடக்கிறது.

கல்வித்துறை சார்பில், பள்ளி
மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் நினைவுத்திறனை வளர்க்கும் வகையில், செஸ் போட்டி நடத்தப்படுகிறது. ஏற்கனவே, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மண்டலம் என பல நிலைகளில், போட்டி நடந்தது. இதையடுத்து, மாநில அளவிலான இறுதிப் போட்டி, வரும் 13ம் தேதி, சென்னை, வேப்பேரியில் உள்ள டவுட்டன் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.

இதில், முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான 360 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, மறுநாள் 14ம் தேதி, சென்னை, சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் குழந்தைகள் தின விழாவில் பரிசு வழங்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...