இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை அறிய SSTA மாநில பொறுப்பாளர்கள் நேரில் செல்கின்றனர் !!!

ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம்!!      SSTA சார்பாக வரும் புதன்கிழமை (12.11.2014) அன்று மாநில பொறுப்பாளர்கள் சென்னைக்கு செல்ல உள்ளனர் , நமது இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு எண் ;10546/2014. court no-10 ல் இறுதி
விசாரணைக்கு வரவுள்ளது,அதுகுறித்து நேரில் நீதிமன்றம் சென்று பார்வையிட உள்ளனர்.மேலும் மதிப்பிற்குரிய கல்வி துறை செயளாலர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் அவர்களையும் சந்தித்து ஆசிரியர்களின் பிரச்சினைகள் பற்றி பேச உள்ளனர்.அதில் குறிப்பாக SSTA வின் சீரிய முயற்சியினால் மற்றும் நண்பர்கள் உதவியால் 5ஆண்டுகளாக பெறப்படாமல் இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தின் (CPS) ஒப்புகை சீட்டு குறித்து(13.10.2014) இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு சென்று அன்றே அதற்கான நடவடிக்கை இயக்குனரால் எடுக்கப்பட்டு அனைவருக்கும் A/C SLIP வழங்க  உத்தரவு பெறப்பட்டது.தற்போது வரை சில ஒன்றியங்களில் வழங்கப்பட்டு அதனை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன,ஆனால் இன்னும் பல ஒன்றியங்களில் வழங்கப்படவில்லை என நண்பர்கள் மூலம்  தகவல் வருகின்றன எந்தெந்த ஒன்றியத்தில் வழங்கப்படவில்லை என்ற விபரம் இயக்குனரிடம் நேரில் பட்டியல் வழங்கப்பட்டு அதனை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் உயர் கல்வி,ஊக்க ஊதியத்திற்கு  முன் அனுமதி ,பின் அனுமதி குறித்த பிரச்சினைகள் சரி செய்து அரசாணை வெளியிட கோரியும் ,குறுவள மைய நாட்களுக்கு ஈடாக தற்செயல் விடுப்பு குறித்தும் பேசப்பட உள்ளது.இதை தவிர வேறு ஏதேனும் (ஊதியம் முதல்வர் கவனத்தில் வைக்க வேண்டியது அது இல்லாமல் )பொது பிரச்சினைகள் இருந்தால் தொடர்பு கொள்ளலாம். மாநில பொது செயளாலர் -9843156296,மாநில தலைவர் -9942430990 மாநில பொருளாளர் -9786173873

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...