10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம்

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் சிறிய மாற்றம் செய்து அரசு தேர்வுகள்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 10-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அட்டவணையை அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே வெளியிட்டிருந்தது. அதில் தற்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழைய அட்டவணைப்படி, மார்ச் 24-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மொழிப்பாடம் 2-ம் தாள் தேர்வு, மார்ச் 20-ம் தேதியே நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...