கோடம்பாக்கத்தில் பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்ட வழக்கில், முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ள, அருளானந்தத்திற்கு ஜாமின் வழங்க, அரசு பதிலளிக்க, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை, கோடம்பாக்கத்தில், கடந்த, 20ம் தேதி, பள்ளி ஆசிரியர் பாஸ்கர்
தாக்கப்பட்டார். இந்த வழக்கில், முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுஇருக்கும், அருளானந்தம் ஜாமின் கேட்டு, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. 'வழக்கில், போலீஸ் தரப்பு விசாரணை இன்னும் முடியவில்லை. இதனால், அருளானந்தத்திற்கு, ஜாமின் வழங்க கூடாது' என, அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெகன் வாதிட்டார்.'மனுதாரரின், ஜாமின் வழங்குவது குறித்து, வரும் 15ம் தேதிக்குள், அரசு பதில் அளிக்க வேண்டும்' என, நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.
சென்னை, கோடம்பாக்கத்தில், கடந்த, 20ம் தேதி, பள்ளி ஆசிரியர் பாஸ்கர்
தாக்கப்பட்டார். இந்த வழக்கில், முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுஇருக்கும், அருளானந்தம் ஜாமின் கேட்டு, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. 'வழக்கில், போலீஸ் தரப்பு விசாரணை இன்னும் முடியவில்லை. இதனால், அருளானந்தத்திற்கு, ஜாமின் வழங்க கூடாது' என, அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெகன் வாதிட்டார்.'மனுதாரரின், ஜாமின் வழங்குவது குறித்து, வரும் 15ம் தேதிக்குள், அரசு பதில் அளிக்க வேண்டும்' என, நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.