ஆதார் அட்டை இல்லாவிட்டால் உதவித்தொகை நிறுத்தம்: 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கெடு

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுமார் 20 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு  வருகிறது. அனைத்து முதியோர் உதவித்தொகை பயனாளிகளும் ஆதார் எண் பெறும் பணிகளை வரும் 28ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு
 உத்தரவிட்டிருந்தது. இதனால் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் ஆதார் எண் கணினியில் பதிவு செய்யும் பணி தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

ஆதார் அட்டைக்காக இதுவரை பதிவு செய்யாத பயனாளிகள் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தாலுகா அலுவலகத்தில் சிறப்பு செயலாக்க திட்ட  துணை தாசில்தாரிடம் கையொப்பம் பெற்று தங்களது விவரங்களை 28ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதார் எண் பதிவு  செய்யாதவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...