ஆசிரியர் பேரினமே அணிதிரண்டு ஆர்பரிப்போம் மார்ச் 8 அன்று !!!

Raja Rajamanikandan
ஆசிரியர் நண்பர்களே இன்று நாம் போராடி சலுகைகளை பெற்றால் அது தமிழ்நாட்டில் உள்ள அனைவரும்தான் பயனை அனுபவிகப்போகின்றோம். போராட்டத்தில் கலந்து கொள்ளலாமல் ஒதுங்கியவர்கள் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் போதும். அதைவிட்டுட்டு போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் ஏதும்

கூறாமல் இருந்தால் அது அவர்களுக்கு கோடானகோடி புண்ணியம் ஆகும். இன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள பதிப்பு தானே என்று விட்டு விட்டால் நாளை பட்டதாரி ஆசிரியர்கள், அடுத்து முமுதுகலை ஆசிரியர், அடுத்து அனைத்து தலைமை ஆசிரியர்கள் என நீண்டுகொண்டே போகும். ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடிப்பதைப்போல் என்ற பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே. அதுபோல் ஆகி விடாமல் பார்த்துக் கொள்வது நம் அனைவரின் கடமையல்லவா? நண்பர்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி பெற்றுத்தந்த சலுகைகள் தான் நாம் இப்போது அனுபவிப்பது. இதை இப்போது விட்டு விட்டால் இனி?????? ????????? ஆகிவிடும். பின்னர் ஆசிரியர் என்று கூறுவதில் அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஆசிரியர் பேரினமே அணிதிரண்டு ஆர்பரிப்போம் மார்ச் 8 அன்று அரசுக்கு எச்சரிக்கை விடும் விதமாக. ஆம் உதித்தபோதே போராட்டத்தில் குதித்த இயக்கம் சீரியக்கம் இந்த இயக்கம் வாழ்வதிலே இருப்பதெங்கள் வாழ்வாகும். ஒன்றுபடுவோம் போராடுவோம் இறுதி வெற்றி நமதே.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...