நேற்று(02.03.2015) SSTA மாநில பொறுப்பாளர்கள் தலைமை செயலகம் சென்று இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையை நிதித்துறை செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளர் (செலவீனம் )மற்றும் ,நிதித்துறை இணை
செயலாளர்,துணைசெயலாளர் அவர்களை சந்தித்து நீதிமன்ற ஆணையை வழங்கினர் ,இணை செயலாளர் அவர்கள் முன்னரே இதுகுறித்து அறிந்தோம் என்றனர் இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர் .மேலும் ஊதியம் குறித்து பிற விபரங்களை பற்றி விபரங்கள் ௯றினோம்,அதுபற்றி அடுத்த கட்ட நடவடிக்கை SSTA சார்பில் விரைந்து எடுக்கப்படும் .மேலும் கல்வித்துறை செயலாளர் அவர்களையும் சந்தித்து CRC (Spl cl)பற்றியும் விரைந்து அரசாணை வெளியிட வலியுறுத்தப்பட்டது அவர்களும் விரைவாக ஆணை வெளியிடப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.அடுத்ததாக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை சந்திப்பு நடைபெற்றது அதில் பின்னேற்பு,சிறப்பு தற்செயல் விடுப்பு ,ஒருநாள் இடைவெளியில் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தில் இருந்து தொடர முடியாமல் உள்ளது பற்றியும் ,மலை சுழற்சியினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பற்றியும் விரிவாக ௯றி அதற்கு விரைவாக முடிவு எட்ட கேட்டுக்கொள்ளப்பட்டது ,சிறப்பு தற்செயல் விடுப்பு ஆணை கல்வி செயலாளர் அலுவலகத்தில் சர்குலரில் உள்ளது விரைவாக வெளி வந்துவிடும் என உறுதி அளித்துள்ளார்கள். ஊதியத்திலும் அரசின் பதிலை பொறுத்து உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராக உள்ளது. உண்மையாக போராடுவோம் !!இழந்ததை விரைவில் வென்றிடுவோம்!! வழக்கறிஞர் சந்திப்பு பற்றிய விபரம் விரைவில் பதிவிடப்படும்.
செயலாளர்,துணைசெயலாளர் அவர்களை சந்தித்து நீதிமன்ற ஆணையை வழங்கினர் ,இணை செயலாளர் அவர்கள் முன்னரே இதுகுறித்து அறிந்தோம் என்றனர் இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர் .மேலும் ஊதியம் குறித்து பிற விபரங்களை பற்றி விபரங்கள் ௯றினோம்,அதுபற்றி அடுத்த கட்ட நடவடிக்கை SSTA சார்பில் விரைந்து எடுக்கப்படும் .மேலும் கல்வித்துறை செயலாளர் அவர்களையும் சந்தித்து CRC (Spl cl)பற்றியும் விரைந்து அரசாணை வெளியிட வலியுறுத்தப்பட்டது அவர்களும் விரைவாக ஆணை வெளியிடப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.அடுத்ததாக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை சந்திப்பு நடைபெற்றது அதில் பின்னேற்பு,சிறப்பு தற்செயல் விடுப்பு ,ஒருநாள் இடைவெளியில் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தில் இருந்து தொடர முடியாமல் உள்ளது பற்றியும் ,மலை சுழற்சியினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பற்றியும் விரிவாக ௯றி அதற்கு விரைவாக முடிவு எட்ட கேட்டுக்கொள்ளப்பட்டது ,சிறப்பு தற்செயல் விடுப்பு ஆணை கல்வி செயலாளர் அலுவலகத்தில் சர்குலரில் உள்ளது விரைவாக வெளி வந்துவிடும் என உறுதி அளித்துள்ளார்கள். ஊதியத்திலும் அரசின் பதிலை பொறுத்து உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராக உள்ளது. உண்மையாக போராடுவோம் !!இழந்ததை விரைவில் வென்றிடுவோம்!! வழக்கறிஞர் சந்திப்பு பற்றிய விபரம் விரைவில் பதிவிடப்படும்.