ஆசிரியர்களை அடிமைகளாக்கும் அரசு !

ஊரில் காய்ச்சலா
கூப்பிடு ஆசிரியர்களை...
குப்பைகளை பொறுக்கச்
சொல்லு....

டெங்குவா
மருந்து தரச்சொல்லு ஆசிரியர்களை...


வாக்காளர் அடையாள  அட்டை
சரிபார்த்தலா கூப்பிடு ஆசிரியர்களை....

மக்கள்தொகை கணக்கெடுப்பா கூப்பிடு அவர்களை
தலையில கட்டு....

 தேர்தல் பணிகளா போகலன்னா மெமோ கொடு

நலதிட்டங்களா
தலைமை ஆசிரியர்
தலையில் கட்டு...

இந்த வரிசையில் இப்போ
சமையலா
அதையும்  ஆசிரியரே செய்யட்டும்
என அரசு வற்புறுத்துவது ஆசிரியர் இனத்தையே அசிங்கப்படுத்தும் செயலாகும்....

சத்த்ணவு ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதை விட்டு சமையல் செய்யும் வேலையை ஆசிரியர்களை வற்புறுத்துவது எந்த வகையில் நியாயம்?

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காமல்,  மனரீதியாக பாதிக்கசெய்து விட்டு சமையல் வேலையையும் செய்யச்சொல்லுவதா? இதை எந்த கல்வியாளரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்....

ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் தராமல் இதர பணிகளை செய்ய கட்டளையிட்டால் கல்வி எவ்வாறு மேம்படும்? கற்பித்தலில் எவ்வாறு முழு அக்கறையோடு செயல்பட முடியும் ....

ஆசிரியர்களா இல்லை அரசின் அடிமைகளா என எண்ண தோனுகிறது இதற்கு  ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைகழகம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது....


இப்படிக்கு
பி.இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர் .
ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைகழகம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...