இந்தோனேசிய கரன்சியில், விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது. முழு முதற்கடவுளான விநாயகருக்கு, நம் நாட்டில் மட்டுமின்றி, இந்தோனேசிய நாட்டிலும்மதிப்பு அளிக்கப்படுகிறது.
அந்நாடு வெளியிட்டுள்ள, 20 ஆயிரம் ரூப்பியா நோட்டில், விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது.அத்துடன், அந்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் கல்விக்கு வித்திட்ட செம்மல், கிஹாஜர் தேவாந்தரானி உருவமும், மறுபுறம் கல்வி நிறுவன படமும் இடம் பெற்றுள்ளன.
இந்தோனேசியாவில், 1.7 சதவீத இந்துக்களே வசிக்கின்றனர்; அதிலும், அங்குள்ள பாலி தீவில் தான், அதிக இந்துக்கள்வசிக்கின்றனர். இந்த கரன்சி நோட்டை, ஆந்திர மாநிலம், அமலாபுரம் எஸ்.பி.ஐ., அதிகாரி ரவிசுப்ரமணியம்சேகரித்து வைத்து உள்ளார்.