நாகூர் அனிபா - திராவிட
இயக்க வட்டாரத்திலும்
தமிழ்முஸ்லிம் வட்டாரத்திலும், ஏன் தென்னிந்திய முஸ்லிம்
வட்டாரத்திலும் கூட மிகவும் அறியப்பட்ட பெயர்.
அவரின் இசை
முஸ்லிம் வட்டாரத்தை
தாண்டி தமிழ் உலகை வலம்
வந்தது. அண்ணாவால்
பெரிதும் மதிக்கப்பட்டவர்.
அன்றைக்கு இவர்
மேடையில் பாடிய
மானங்கெட்ட காங்கிரஸே கீழே இறங்கு என்ற
பாடல் அன்றைய
காங்கிரஸ் அரசை
மிகவும் உலுக்கியது.
இருபதாம் நூற்றாண்டு
இஸ்லாமிய இசைப்பாடல்களே
இவர் மூலம்
தான் வடிவம்
பெற்றது. வஹ்ஹாபியத்தின்
தாக்கம் காரணமாக
தமிழ் முஸ்லிம்
இசை தேக்கம்
அடைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் இவரின் இழப்பு
இவரின் இடத்தில்
மற்றொருவரை கண்டுபிடிக்க முடியாத நிலைக்கு சென்றிருக்கிறது.
இசை சகாப்தம்
ஈடுகட்ட முடியாமல்
போயிருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டை
வலம் வந்த
அந்த இசைத்தென்றல்
தன் உன்னத
தாலாட்டை நிறுத்திக்கொண்டது.