25 சதவீத ஒதுக்கீடு சேர்க்கை ஜூன் 26ல் குலுக்கல்; கல்வித்துறை அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் (ஆர்.டி.இ.,) 25 சதவீதம் மாணவர் சேர்க்கையை குலுக்கல் முறையில் ஜூன் 26ல் கல்வித்துறை நடத்துகிறது.


முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் கோவிந்தராஜன் கூறியதாவது

மாவட்டத்தில் ஆர்.டி.இ., அடிப்படையில் 156 மெட்ரிக், பிரைமரி பள்ளிகள் நுழைவு வகுப்புகளில் மொத்தம் 10,260 இடங்கள் உள்ளன. இவற்றில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின்படி 2617 இடங்கள் நிரப்ப வேண்டும். தற்போது வரை 1898 விண்ணப்பங்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன.

மேலும் 19 மெட்ரிக் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனால் இப்பள்ளிகளில் சம்பந்தப்பட்ட பெற்றோர் முன்னிலையில், ஜூன் 26ல் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

இதன்பின் ஆர்.டி.இ., ஒதுக்கீட்டில் காலி இடங்கள் மற்றும் பள்ளிகள் விவரம் குறித்து மெட்ரிக் பள்ளி அலுவலகத்தில் மக்கள் பார்வைக்காக ஒட்டி வைக்கப்படும் என்றனர்.

19 பள்ளிகள் விவரம்

மதுரை பி.எம்.எஸ்.,                    குட்ஷெப்பர்டு,

இந்திரா காந்தி,                             மகரிஷி வித்யாமந்திர்,

மகாத்மா,                                       எம்.ஆர்.ஆர்.எம்.ஏ.வி.எம்.எம்.,

நியூ அமெரிக்கன்,                        எஸ்.டி.ஏ.,

சிவகாசி நாடார்,                           சாரதா வித்யாலயம்,

வாணி வித்யாலயா,                   புனித மைக்கேல்,

சேவியர்,                                        டி.கல்லுப்பட்டி எம்.எஸ்.ஆர்.,

திருமங்கலம் பி.கே.என்.,          மேலுார் சக்தி வித்யாலயா,

கிளாங்குளம் சமபாரதம்,          கீழவளவு பாலன் எவர்கிரீன்,

மேலுார் சுந்தரேஸ்வரா வித்யாசாலா

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...