குரூப் 2 தேர்வு: விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்தோரின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு

குரூப் 2 தேர்வுக்கு பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களில், ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
 இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.ஷோபனா வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

 குரூப் 2 தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் காலியாகவுள்ள ஆயிரத்து 241 காலிப்பணிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு 6.2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
 சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in  -இல் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை பதிந்து தங்களது விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தினை சரிபார்த்துக் கொள்ளலாம்.
 சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தி, அதன் விவரம் இணையதளத்தில் இல்லாவிடில், அந்த விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கான ரசீதை (Challan) நகலுடன் தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியில் (contacttnpsc@gmail.com) விவரங்களை அனுப்பலாம். விண்ணப்பதாரரின் பெயர், குரூப் 2-க்கான விண்ணப்பப் பதிவு எண், விண்ணப்ப தேர்வுக் கட்டணம் (ரூபாய்), கட்டணம் செலுத்திய இடம் (அஞ்சலகம் அல்லது இந்தியன் வங்கி) ஆகிய விவரங்களைத் தெரிவிக்கலாம் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...