அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ராமேஸ்வரம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி?

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உடல் தற்போது புதுதில்லிக்கு ராணுவ மரியாதையுடன் கொண்டுவரப்பட்டுள்ளது.
அங்கு முப்படை தளபதி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி
செலுத்தி வருகின்றனர். பிறபகல் 3 மணிக்கு பொதுமக்களின் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி மார்ட் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளைக் காலை 7 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர். நாளை காலை 7 மணிக்கு விமானம் மூலம் தமிழகம் கொண்டு செல்லப்பட்டு 1 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் வைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து அப்துல் கலாம் அண்ணன் மகன் முத்து மீரன் மரைக்காயர் பேரன் எம். சலீம் என்பவர் ராமேஸ்வரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது நாளை ராமேஸ்வரம் கொண்டுவரப்படும் அப்துல் கலாமின் உடல் அவர் வாழ்ந்த வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

பின்னர். நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் கலாமின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 6 மாநில முதல்வர்கள் ராமேஸ்வரம் வர உள்ளதாக அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...