தேசிய திறனறித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்க நடத்தப்படும் தேசிய திறனறித் தேர்வுக்கு வியாழக்கிழமை (ஆக.20) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 2015-16-ஆம் கல்வியாண்டுக்கான மாநில அளவிலான தேசிய திறனறி முதல் கட்டத் தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.
 இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து ஆகஸ்ட் 31 வரை பதிவிறக்கம் செய்யலாம்.
 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31-க்குள் அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர்களிடம் ரூ.50 கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...