அரசின் இலவசத் திட்டங்களை நிறைவேற்ற, தனி அமைப்பாளரை நியமிக்க வேண்டும் என, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத்தின், சென்னை
மாவட்ட பொருளாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசின் சார்பில், 14 இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதற்கான பொருட்களை வாங்க, ஆசிரியர்கள் பலமுறை செல்ல வேண்டியுள்ளது. இதனால், கற்பிக்கும் பணி பாதிக்கப்படுகிறது. எனவே, இலவசத் திட்டங்களை செயல்படுத்த, தனி அமைப்பாளரை நியமிக்க வேண்டும். சுயநிதி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் லேப்-டாப் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட பொருளாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசின் சார்பில், 14 இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதற்கான பொருட்களை வாங்க, ஆசிரியர்கள் பலமுறை செல்ல வேண்டியுள்ளது. இதனால், கற்பிக்கும் பணி பாதிக்கப்படுகிறது. எனவே, இலவசத் திட்டங்களை செயல்படுத்த, தனி அமைப்பாளரை நியமிக்க வேண்டும். சுயநிதி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் லேப்-டாப் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.