வெளிப்படைத்தன்மையுடன் போட்டித் தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவர் !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் என, புதிதாகப்  பொறுப்பேற்ற தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார்.

 டி.என்.பி.எஸ்.சி. தலைவராக அவர் புதன்கிழமை பொறுப்பேற்றார்.
 அப்போது, தேர்வாணைய உறுப்பினர்கள், செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு தேர்வாணையத் தலைவர் கே.அருள்மொழி அளித்த பேட்டி:
 தேர்வாணையத்தின் தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும். மேலும், தேர்வாணைய இணையதளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் போட்டித் தேர்வு எழுதுவோருக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் வகையில் அமைக்கப்படும்.
 தொகுதி 4, கிராம நிர்வாக அலுவலர் போட்டித் தேர்வுகளை அறிவிப்பதில் எந்தத் தாமதமும் இருப்பதாகக் கருதவில்லை. தாமதம் இருந்தால் அந்தக் குறை நிவர்த்தி செய்யப்படும்.
 தேர்வுகளும், தேர்வாணையம் தொடர்பான நடவடிக்கைகளும் வெளிப்படையாகவும், உண்மைத்தன்மையுடனும், போட்டித் தேர்வு நடத்துவோருக்கு உறுதுணையாகவும் இருக்கும்.
 இணைய சேவை மையங்கள்: தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இணைய வழி சேவை மையங்கள் தலைமைச் செயலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள் என 280 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
 முதல் கட்டமாக, தேர்வுக்கு நிரந்தரப் பதிவு செய்ய ரூ.50-ம், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ.30-ம், விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூ.5-ம், விண்ணப்பங்களில் மாறுதல் செய்து நகல் பெற ரூ.20-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்துக்குச் செலுத்த வேண்டிய நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.50-ம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றையும் இணைய சேவை மையங்களிலேயே செலுத்தலாம். பணம் செலுத்தியதற்கான ஒப்புகைச் சீட்டையும் அங்கேயே பெற்றுக் கொள்ளலாம்.
 இந்தச் சேவைகள் எல்காட் நிறுவனத்தால் நடத்தப்படும் இணைய சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று அருள்மொழி தெரிவித்தார்.
 இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது, அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...