இணை இயக்குனர் கூட்ட தகவல்கள்- அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கண்டிப்பாக பின் பற்ற வேண்டும்!!!

இன்று18-11-2015 வேலூரில் நடைபெற்ற இணை இயக்குனர்( Hsc.JD)மீளாய்வு கூட்ட தகவல்:தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்: ந.க.எண்.28804/ஜே2/2015.  நாள்.17-11-2015 மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர்  செயல்முறைகள். ந.க.எண்.34764/எம்/இ1/2015, நாள்.15.11.2015 தொடர் தலை காரணமாக அனைத்துவகைப்
பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தவறாமல் கடைபிடிக்குமாறும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  நாளை 19-11-2015 முற்பகல் 8.30மணிக்கு முன்னதாக அனைத்து  ஆசிரியர்களும் பள்ளிக்குச்சென்று வகுப்பறைகளை முழுவதும் ஆய்வு செய்து உறுதி செய்த பின்னரே வகுப்பறையில் மாணவர்களை அமர வைக்கப்பட வேண்டும். பள்ளியில் மாணவர் பாதுகாப்பிற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை எனில் உடனே தொடக்கக்கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டு மாற்று ஏற்பாடு செய்தல் வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...