மின் வாரிய வேலை1.10 லட்சம் பேர் விண்ணப்பம்!

மின் வாரியத்தில், எலக்ட்ரிக்கல் பிரிவில், 300; சிவில், 50; மெக்கானிக்கல், 25 என, 375 உதவிப் பொறியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டு, அதற்கான
தேர்வு குறித்த அறிவிப்பு, டிச., 28ல் வெளியானது. இன்ஜினியரிங் பட்டதாரிகள், மின் வாரிய இணையதளம்
வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க, ஜன., 11 வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, உதவிப் பொறியாளர் தேர்வுக்கு, 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். எழுத்துத் தேர்வு, அண்ணா பல்கலை மூலம், வரும், 31ல் நடக்கிறது; தேர்வு முடிந்ததும், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, உதவிப் பொறியாளர்கள் நியமிக்கப்படுவர். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...