பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள், பிப்., 8 முதல், 'ஹால் டிக்கெட்' பெற்றுக் கொள்ளலாம்'

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள், பிப்., 8 முதல், 'ஹால் டிக்கெட்' பெற்றுக் கொள்ளலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:



மார்ச் மாதம் நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், பிப்., 8 முதல், ஹால் டிக்கெட்டைwww.tndge.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வர்கள், தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி, ஹால் டிக்கெட்டை பெற முடியும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...