கட்-ஆஃப் மதிப்பெண்களை நிர்ணயிக்கும் கணித தேர்வு இன்று !

தொழிற்பாடப் பிரிவுகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களை நிர்ணயிக்கும் பிரதான பாடங்களில் ஒன்றான பிளஸ் 2 கணக்குத் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 4 ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில் தமிழ், ஆங்கிலம் தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.



இதைத் தொடர்ந்து கடந்த 14-ஆம் தேதி வேதியியல் தேர்வு நடைபெற்றது.இத்தேர்வு மருத்துவம், பொறியியல், விவசாயம் போன்ற தொழிற் படிப்புகளை தேர்வு செய்ய கட்-ஆப் மதிப்பெண்களைநிர்ணயிப்பதாகும். ஆனால், சிறிதும் எதிர்பார்க்காத வகையில் வேதியியல் வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 18) பிளஸ் 2 கணித பாடத் தேர்வு நடைபெறுகிறது. வேதியியல் தேர்வு போன்று இல்லாமல் இத்தேர்வு, எளிமையாக இருக்க வேண்டும்என்பதே மாணவ, மாணவிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...