யுகாதி பண்டிகை வாழ்த்துகள்!

யுகாதி பண்டிகை

யுகாதி பண்டிகை இந்த வருடம் ஏப்ரல் 8ம் நாள்  வெள்ளிக் கிழமை அன்று வருகிறது .இதை கர்நாடகா ,ஆந்திரா ,மகாராஷ்ட்ரா போன்ற இடங்களில்  வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.இதை நம் நாட்டில் தெலுங்கு மக்கள் கொண்டாடுகிறார்கள் .இதை தெலுங்கு வருடப் பிறப்பு என்றும்  சொல்லுவர்.


யுகாதி என்றால் "யுகத்தின் ஆதி ஆரம்பம்" என்று பொருள்.அன்று தான் பிரம்மா  உலகத்தை  படைத்ததாக  கூறுகிறார்கள் .

யுவாதி வசந்த காலத்தில்  கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் புதிய வேலை ,கல்வி ,தொழில் தொடங்குவது சிறந்தது .

வாழ்க்கையில் மகிழ்ச்சி ,கவலை ,கோபம்,அச்சம்,சலிப்பு ,ஆச்சரியம்  போன்ற இவைகள் எல்லாம் மாறி மாறி வரக்கூடியவை .இந்த தத்துவத்தை உணர்த்தும் படியாக ,ஆறு சுவைகள் கொண்ட பச்சடிகளை உணவில் சேர்த்து கொள்வர்.

கசப்பு ----வேப்பம்பூ

துவர்ப்பு ---மாங்காய்

புளிப்பு ----புளி

கார்ப்பு ---மிளகாய்

இனிப்பு ---வெல்லம்

உவர்ப்பு ---உப்பு

இதை கொண்டு பச்சடி செய்வர்.

யுவாதி பண்டிகை அன்று அனைவரும் விடியற்காலையில் எழுந்து ,குளித்து விட்டு ,வீட்டின் முன் சாண நீரை தெளித்து ,அழகான ரங்கோலி கோலம் போடுவர் .வீட்டின் தலை வாசலில் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிப்பர் .

ஆறு சுவைகள் கொண்ட பச்சடியை  சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவர் .இந்த பச்சடியை ஆந்திர மக்கள் "யுகாதி பச்சடி "என்பர்.கர்நாடகாவில் "தேவு  பெல்லா "என்று அழைப்பர்.

 கோவில்களில் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு  சிறப்பாக பூஜைகள் செய்யப்படுகின்றன.மாலையில் வீட்டு  வாசலில் விளக்கேற்றி ,கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் காண்பர் .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...