குழந்தை குடித்த குளிர்பானத்தில், அட்டை புழு இருந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை புதுவண்ணாரப்பேட்டை, சிவன் நகரைச் சேர்ந்த பிரேம்குமார் - அபிராமி தம்பதியின், 2 வயது மகள் உபஸ்ரீ. நேற்று காலை, வீட்டருக்கே உள்ள மளிகை கடையில், அபிராமி, தன்
மகளுக்கு, பிரபல நிறுவனத்தின் குளிர்பானத்தை வாங்கிக் கொடுத்தார். உபஸ்ரீ குளிர்பானத்தை குடிக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில், மயங்கி விழுந்தாள். இதையடுத்து, குழந்தை குடித்த குளிர்பானத்தை, பிரேம்குமார் சோதனை செய்ததில், அதில், அட்டை புழு இருந்தது தெரியவந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த பிரேம்குமார், இதுகுறித்து கடைக்காரரிடம் கேட்டுள்ளார். ஆனால், கடைக்காரர் சரியான பதில் சொல்லாததால், தகராறில் ஈடுபட்டார். பின், புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். குழந்தை உபஸ்ரீ, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
மகளுக்கு, பிரபல நிறுவனத்தின் குளிர்பானத்தை வாங்கிக் கொடுத்தார். உபஸ்ரீ குளிர்பானத்தை குடிக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில், மயங்கி விழுந்தாள். இதையடுத்து, குழந்தை குடித்த குளிர்பானத்தை, பிரேம்குமார் சோதனை செய்ததில், அதில், அட்டை புழு இருந்தது தெரியவந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த பிரேம்குமார், இதுகுறித்து கடைக்காரரிடம் கேட்டுள்ளார். ஆனால், கடைக்காரர் சரியான பதில் சொல்லாததால், தகராறில் ஈடுபட்டார். பின், புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். குழந்தை உபஸ்ரீ, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.