2ஜி சேவை உள்ளிட்ட இலவச தொலைப்பேசி அழைப்பு சேவை வழங்கும் புதிய ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆப்ஸ் இந்தியாவில் அதிகமானவர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது.சிங்கப்பூரைச் சேர்ந்த ஓடிடி சேவை வழங்கும்
நிறுவனம் உலகின் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. இதன்படி இந்த ஆப்ஸ் பயன்படுத்துவோர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இலவச தொலைப்பேசி அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை பெற முடியும். இலவச சேவை வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, சிங்கப்பூர் நிறுவனம் 20,000 அமெரிக்க டாலர்களை வழங்கும்.இதனால் தொலைப்பேசி அழைப்பிற்கான கட்டணம் வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படாமல், தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்படும்.

நானு (nanu) என்ற இந்த ஆப்சை இதுவரை உலகம் முழுவதும் 2.6 மில்லியன் பேர் டவுன்லோட் செய்துள்ளனர். இவர்களில் 60 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வியாபார யுக்தியாக இந்த ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு முறை கால் செய்யும் போதும், எதிர்முனையில் இருப்பவர்கள் அதனை எடுக்க ஆகும் 10 விநாடி காலத்திற்குள் பெறப்படும் விளம்பரங்கள் மூலம் இந்நிறுவனத்திற்கு வருமானம் கிடைப்பதால், இலவச தொலைப்பேசி வழங்க முடிகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனம் உலகின் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. இதன்படி இந்த ஆப்ஸ் பயன்படுத்துவோர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இலவச தொலைப்பேசி அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை பெற முடியும். இலவச சேவை வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, சிங்கப்பூர் நிறுவனம் 20,000 அமெரிக்க டாலர்களை வழங்கும்.இதனால் தொலைப்பேசி அழைப்பிற்கான கட்டணம் வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படாமல், தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்படும்.

நானு (nanu) என்ற இந்த ஆப்சை இதுவரை உலகம் முழுவதும் 2.6 மில்லியன் பேர் டவுன்லோட் செய்துள்ளனர். இவர்களில் 60 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வியாபார யுக்தியாக இந்த ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு முறை கால் செய்யும் போதும், எதிர்முனையில் இருப்பவர்கள் அதனை எடுக்க ஆகும் 10 விநாடி காலத்திற்குள் பெறப்படும் விளம்பரங்கள் மூலம் இந்நிறுவனத்திற்கு வருமானம் கிடைப்பதால், இலவச தொலைப்பேசி வழங்க முடிகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.