தனியார் மயத்தை கண்டித்து வரும் 29ம் தேதி அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் !

வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயத்தை கண்டித்து வரும் 29ம் தேதி அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.இதனால், வங்கிச் சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலைஉருவாகியுள்ளது.
 இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது: -

வேலைநிறுத்த போராட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர்த்து பிற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் 10 தனியார் வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்கள் என 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். அன்றைய தினம் நாடு முழுவதும் 80,000 கிளைகள் மூடப்பட்டிருக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...