பட்ட மேற்படிப்பு படிக்க சேர்க்கைக்கான காலம் நீட்டிப்பு!!

சேலம்: நாச்சியப்பா கூட்டுறவு மேலாண் நிலையத்தில், கோவை பாரதியார் பல்கலையுடன் இணைந்து பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.



இதுகுறித்து, துணைப்பதிவாளர் தமிழ்நங்கை கூறியதாவது: கோவை பாரதியார் பல்கலையுடன் இணைந்து, சேலம் அம்மாபேட்டையில் இயங்கி வரும் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், சிபிபி முறையில், பி.காம்., எம்.காம்., எம்.பி.ஏ., போன்ற பட்ட/ பட்ட மேற்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை, 1ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.

வேலைக்கு செல்வோர், எவ்வித இடையூறுமின்றி பட்ட / பட்ட மேற்படிப்புகளை படித்து பயன்பெறலாம். ஒரே நேரத்தில், இரண்டு பட்ட/பட்ட மேற்படிப்புகள் படிக்க வாய்ப்புள்ளது. விண்ணப்பங்களை, 100 ரூபாய் செலுத்தி, நேரில் பெற்றுக் கொள்ளலாம். வரும், 23ம் தேதி சேர்க்கைக்கான கடைசி தேதி.

மேலும் தகவல் பெற, நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், காமராஜ் நகர் காலனி, அம்மாபேட்டை, சேலம்- 1 என்ற முகவரியிலோ அல்லது 0427 2240944 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...