சிறுமிக்கு சிறுநீரகம் அளித்த ஆசிரியை!

இறந்தப் பின்னும் உடலுறுப்புகளை தானம் அளிக்க மறுக்கும் இந்த உலகில் தன் வகுப்பில் பயிலும் சிறுமிக்காக சிறுநீரகத்தைத் தானமாக அளிக்க முன்வந்த ஆசிரியரின் செயல் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லயலா என்ற அமெரிக்காவை சேர்ந்த நான்கு வயது சிறுமி, மைக்ரோஸ்கோப்

பாலியான்கிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறுமிக்கு சிறுநீரகம் செயலிழந்து 12 மணி நேரத்துக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்ய வேண்டி இருந்தது. குழந்தை மிகவும் சோர்வுற்று காணப்பட்டாள். மேலும், சிறுமிக்கு வேறு சிறுநீரகம் பொருத்த வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் விளம்பரமும் செய்யப்பட்டது.

இந்நிலையில் லயலா படித்த பள்ளியின் ஆசிரியை படிஸ்டா என்பவர் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்துள்ளார். இதுகுறித்து ஆசிரியை படிஸ்டா கூறியதாவது, “லயலா உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உடனே நான் மருத்துவரிடம் சென்று என்னை பரிசோதனை செய்து, எனது சிறுநீரகத்தை சிறுமிக்குத் தானமாக கொடுத்தேன்” என்று கூறியுள்ளார்.

இந்த ஆசிரியரின் மிக அற்புதமான செயலையடுத்து நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுமி உடல்நலம் தேறி வருகிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...