ஜெ., உடல்நலம்; வதந்திகளை நம்ப வேண்டாம்: அப்பல்லோ மருத்துவர்கள் !

 முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பல்லோ மருத்துமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 22ம் தேதி இரவு சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைப்பாட்டினால் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.




அவர் கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துமனை தினமும் ஊடகங்களுக்கு அதிகாரப்பூர் தகவல்களை அளித்து வருகிறது.

அதன்படி, இன்று வெளியிட்ட தகவலில், "முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்" என தெரிவித்துள்ளது.




இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தொடர்பாக வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...