ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம் ‘டிராய்’ பரிந்துரை!!

புதுடெல்லி,பிரபல ரிலையன்ஸ் நிறுவனம் ‘ஜியோ’ என்ற புதிய செல்போன் சேவையை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது.ஜியோ வாடிக்கையாளர்கள் மற்ற தொலைபேசி நிறுவன எண்களுக்கு தொடர்பு கொண்டால், சரியான இணைப்பு வசதி

வழங்கப்படுவதில்லை. ஜியோவின் வளர்ச்சியை முறியடிப்பதற்காக இவ்வாறு செய்யப்படுவதாக ‘ஜியோ’ நிறுவனம் சார்பில் டிராய் (இந்திய தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பில் புகார் அளிக்கப்பட்டது.இதனையடுத்து ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.3,050 கோடி அபராதம் விதிக்க டிராய் பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து மேற்கண்ட 3 நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...