சனிக்கிழமை (03.12.16) நடைபெற உள்ள குறுவளமைய அளவிலான பயிற்சியை ஒத்திவைக்க ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு !!

தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நிலவும் வங்கி நடைமுறைகளால் பணம் எடுப்பதில் சிரமங்கள் நிலவி வருகிறது. மேலும் ஆண்டு இறுதியாக உள்ளதால் விடுமுறை இல்லாத நிலையில், ஆசிரியர்கள் வங்கிக்கு பணம் எடுக்கச் செல்ல இயலாத நிலையும்
ஏற்பட்டுள்ளது.

எனவே நவம்பர் மாத ஊதியத்தை வங்கிக்குச் சென்று எடுக்க வசதியாக வரும் சனிக்கிழமை (03.12.16) நடைபெற உள்ள குறுவளமைய அளவிலான பயிற்சியினை ஒத்திவைத்து வேறொரு நாளில் நடத்திட அரசு ஆவன செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். தொடக்க கல்வி துறையும், அனைவருக்கும் கல்வி இயக்கமும் ஆசிரியர்களின் இந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்ற ஆவன செய்வார்கள் என்ற நம்பிக்கையில் ஆசிரியர்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...